முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

இலக்கிய வாசிப்பின் இன்றைய இன்றியமையாமை| ஆக்கம் : கார்த்திக்

இலக்கிய வாசிப்பும் சமூகமும்: சிந்தனை வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு தவிர்க்க இயலாதது; மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது; எல்லாக் காலத்திற்கும் பொருத்தமுடையது. இலக்கிய வாசிப்பு கொண்ட சமூகம்தான், தன்னைத் தன்னிறைவுச் சமூகமாக உருவெடுக்கத் தன்னை இலக்கியம் வழி சீர்தூக்கிப் பார்க்கும். தமிழ் இலக்கியத்தைக் கால வாரியாகப் பகுத்தாலும் பாடுபொருள் வாரியாகப் பகுத்தாலும் அதில் இனங்காண முடிவது இலக்கிய வாசிப்பைக் கைக்கொள்வதால் நமக்குள் இருக்கின்ற நிறைகுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும் என்பதைத்தான். இது தனி மனித அளவிலும் அமைந்திருக்கிறது; சமூக அளவிலும் அமைந்திருக்கிறது. இவ்வாறு முற்போக்கு ரீதியிலான மாற்றுச்சிந்தனைகளை உருவாக்கும் தோற்றுவாய்களாகவும் இலக்கிய வாசிப்பு வாயில்கள் அமைகின்றன. சமகால இலக்கியத் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘அறிவுச் சமூகம்’ என்னும் உயர்பண்பியலுக்கு வாசிப்பின் பரவலாக்கம் மிக முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது. இலக்கியம் என்னும் அழகியலை ஒட்டி பேசப்படும் சிந்தனைகளைப் பயில்வது இலக்கிய வாசிப்பு என்று பொத்தாம்பொதுவாகக் கூறினாலும், அதைக்கடந்த வரையறையும், அதைக்க...

சமீபத்திய இடுகைகள்

தமிழியல் ஆய்வு மாநாடு - 2019 முதன்மை விழா

தமிழியல் ஆய்வு மாநாடு - 2019 முதன்மை விழா அழைப்பிதழ்

தமிழியல் ஆய்வு மாநாடு - 2019 தொடக்கவிழா நிழற்படங்கள்

தமிழியல் ஆய்வு மாநாடு - 2019 தொடக்கவிழா அழைப்பிதழ்

தமிழியல் ஆய்வு மாநாடு 2019 இன் சின்னம்

தமிழியல் ஆய்வு மாநாடு 2019

வளர் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018